×

1,303 ஆதி திராவிட மகளிர் மற்றும் இளைஞர்களை தொழில் முதலாளிகள் ஆக்கியுள்ளது அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்: திமுக பெருமிதம்

சென்னை: தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் தொழில் முதலீட்டில் 35 சதவீத தொகையை அரசு மானியமாக வழங்குகிறது என தி.மு.க. தெரிவித்திருக்கிறது. அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் புதிய திட்டத்துக்கு 2023 – 2024 ஆம் ஆண்டு ரூ.100 கோடி அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 1,303 ஆதி திராவிட மகளிர் மற்றும் இளைஞர்களை அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம், தொழில் முதலாளிகள் ஆக்கியுள்ளது. அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் திராவிட மாடல் அரசின் புதிய சாதனை என்று தி.மு.க. பெருமிதம் தெரிவித்துள்ளது. ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் முன்னேற்றத்துக்காக அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். பட்டியலின, பழங்குடியின இளைஞர்களை தொழில் முனைவோராக்கும் ஓர் அருமையான திட்டம் தொழில் முன்னோடிகள் திட்டம் என திமுக தெரிவித்துள்ளது.

The post 1,303 ஆதி திராவிட மகளிர் மற்றும் இளைஞர்களை தொழில் முதலாளிகள் ஆக்கியுள்ளது அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்: திமுக பெருமிதம் appeared first on Dinakaran.

Tags : Adi Dravida ,Annal ,DMK ,Perumitham ,CHENNAI ,DMK Perumitham ,Dinakaran ,
× RELATED அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள்...